முதல்வர் நிவாரண நிதி உயர்நீதிமன்றத்தில் உறுதி
மதுரை: துாத்துக்குடி மாவட்டம் சுடலை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
எனது பெற்றோர் 2019ல் வாகன விபத்தில் இறந்தனர். சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிந்தனர். முதல்வர் நிவாரண நிதியின் கீழ் ரூ.2 லட்சம் இழப்பீடு கோரி கலெக்டர், திருச்செந்துார் ஆர்.டி.ஓ.,விற்கு மனு அனுப்பினேன். அதை பயனாளிகள் பட்டியலில் பதிவு செய்ய ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார். அது நிலுவையில் உள்ளது. இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.
அரசு தரப்பு: மனுதாரரின் மனு மூப்பு நிலையை (சீனியாரிட்டி) அடையும் போது, பரிசீலிக்கப்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தது. இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை பைசல் செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
Advertisement
Advertisement