சைக்கிளிங் போட்டியில் பதக்கம்; கோவை வீராங்கனைகள் அசத்தல்

கோவை; பீகாரில் நடந்து வரும் 'கேலோ இந்தியா யூத் கேம்' போட்டியில், கோவை வீராங்கனைகள் இருவர் உட்பட மூவர், வெண்கலம் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் 'கேலோ இந்தியா யூத் கேம்' போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கியது; இன்று நிறைவடைகிறது. இதில், மகாராஷ்டிரா, டில்லி, கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 250 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
பெண்களுக்கான சைக்கிளிங் தனிநபர் 'டைம் டிரையல்' போட்டியில் கோவையை சேர்ந்த தபிதா வெண்கலம் வென்றார். குழு போட்டியில் கோவையை சேர்ந்த தபிதா, ஜெய் ஜோட்சனா, துாத்துக்குடியை சேர்ந்த நிறைமதி ஆகியோர் அடங்கிய அணி வெண்கலம் வென்று, தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளது. வெற்றி பெற்ற வீராங்கனைகளை, கோவை மாவட்ட சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
Advertisement
Advertisement