தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்முவில் முதல்வர் உமர் அப்துல்லா ஆய்வு

ஸ்ரீநகர்: ஜம்முவில் பாகிஸ்தானின் ஏவுகணையால் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மக்களை முதல்வர் உமர் அப்துல்லா நேரில் சென்று நலம் விசாரித்தார்.
பாகிஸ்தானுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தி, இந்தியா தக்க பாடம் புகட்டியது. இதனால் ஜம்மு முதல் ஜெய்சால்மர் வரையிலான எல்லைப் பகுதிகளில், பாகிஸ்தான் ட்ரோன்கள் , ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசியது.
ஜம்முவில் பாதுகாப்பு படையினர் உஷாராக இருந்த நிலையில், பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி, சதி திட்டத்தை முறியடித்துள்ளனர். அத்துமீறி பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்திய ஜம்முவிற்கு, முதல்வர் உமர் அப்துல்லா விரைந்தார்.
அவர் ஜம்முவில் பாகிஸ்தான் வீசிய ஏவுகணையால் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மக்களை நேரில் சென்று பார்வையிட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
முன்னதாக, ''ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல் தோல்வி அடைந்துள்ளது'' என்று உமர் அப்துல்லா சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.




மேலும்
-
இந்தியா தாக்குதலில் பாக்., ராணுவ தளங்கள், முகாம்கள் சேதம்!
-
பாக்., ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு; நமது படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
-
அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: தலையிட உலக வங்கி மறுப்பு
-
எல்லையோர மக்களின் பாதுகாப்பு: குஜராத் முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை
-
ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியது மத்திய அரசு; ராணுவ பலத்தை அதிகரிக்க நடவடிக்கை