முன்பருவ கல்வி முடித்த 117 பேருக்கு முதன்முறையாக பட்டச்சான்று வழங்கல்

நாமக்கல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், திருச்செங்கோடு நகர்ப்புறம் சார்பில், முன்பருவ கல்வி முடித்தவர்களுக்கு பட்டச்சான்றிதழ் வழங்கும் விழா, நாமக்கல் மாநகராட்சி அங்கன்வாடி மையத்தில், நேற்று நடந்தது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் (பொ) சசிகலா தலைமை வகித்தார். ஒன்றிய திட்ட அலுவலர் வித்யாலட்சுமி வரவேற்றார். வட்டார கல்வி அ

லுவலர்கள் சந்திரவதனி, புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட கல்வி அலுவலர் பச்சமுத்து, குழந்தைகளுக்கு பட்டச்சான்று வழங்கினார். அவர் பேசுகையில், ''முன்பருவ கல்வி என்பது, பள்ளியில் தொடக்க கல்விக்கு செல்வதற்கு முன், குழந்தைகள் பெறும் ஆரம்ப கல்வியை குறிக்கிறது. இது, குழந்தைகளை பள்ளிக்கான தயார்நிலைக்கு கொண்டு செல்ல உதவுகிறது,'' என்றார். முன்பருவ கல்வி முடித்து, முதல் வகுப்பு செல்லும், 117 மாணவ, மாணவியருக்கு, முதன் முறையாக பட்டச்சான்று வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி கவுன்சிலர் சரவணன், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள், பெற்றோர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement