அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி

தூத்துக்குடி: ''அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது'' என முன்னாள் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாகிஸ்தான் இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்களை கொலை செய்துள்ளனர். துணை ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரியையும் கொலை செய்துள்ளனர். அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
டிரோன்களை நமது நாட்டுக்குள் அனுப்பி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துகிறது. பாகிஸ்தானில் இருக்கக்கூடிய பயங்கரவாதிகள் மீது மட்டுமே பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்துகின்றனர். பாகிஸ்தான் என்ன செய்கிறது இந்தியாவில் உள்ள அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்தியா மிகப் பெரிய பொருளாதார நாடு.
இந்தியாவின் பொருளாதாரத்தில் 12 ல் ஒரு பங்கு தான் பாகிஸ்தான் பொருளாதாரம். நாம் எந்த நாட்டின் எல்லையை பிடிப்பதற்காக சண்டை போடவில்லை. நமது நாட்டு பங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்தப் போர் இன்றோ, நாளையோ முடிவடைய போவது கிடையாது. இந்தப் போர் பயங்கரவாதத்திற்கு எதிராக நடக்கிறது. இது இப்போது முடியாது.
இந்தியாவின் நடவடிக்கை பார்த்த பிறகு பாகிஸ்தான் இந்தியாவில் ஒரு உயிரை கொல்வதற்கு பயப்பட வேண்டும். அரசின் கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் இல்லை. பாகிஸ்தான் ஒரு பெரிய நாடே கிடையாது. பாகிஸ்தான் என்ற நாடு வரைபடத்தில் இருக்காது.
தமிழகத்தில் முதல்வர் ராணுவ வீரர்களுக்காக முன்னெடுக்கும் பேரணி வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முதல்வரும் இந்திய அரசுக்கு இந்த நேரத்தில் தனது முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.





மேலும்
-
முப்படை தளபதிகளுடன் மோடி சந்திப்பு!
-
பயங்கரவாத முகாம்கள் அழிப்பு; புதிய வீடியோ வெளியிட்டு ராணுவம் விளக்கம்!
-
ராணுவத்திற்கு உதவ தயார்; சண்டிகரில் குவிந்த இளைஞர்கள்!
-
அரசு பள்ளியில் சாதனை
-
போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு