சூறாவளியுடன் மழை 600 வாழைகள் சேதம்

வடமதுரை:திண்டுக்கல்மாவட்டம் வடமதுரை பகுதியில் நேற்றுமுன்தினம் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு 600 வாழை, 3 தென்னை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
வடமதுரை அடுத்த வேலாயுதம்பாளையம், மூணாண்டிபட்டி பகுதியில் நேற்றுமுன்தினம் மாலையில் பலத்த சூறாவளியுடன் ஒரு மணி நேரம் மழை பெய்தது. சூறாவளி வேகத்தால் வேலாயுதம்பாளையம் பாலசுப்பிரமணி தோட்டத்தில் 200 வாழை, ரவிச்சந்திரன் தோட்டத்தில் 400 வாழை, நாகராஜ் தோட்டத்தில் 3 தென்னை மரங்கள் முறிந்து விழுந்து சேதமாகின. பாதிப்பு விபரங்களை வடமதுரை தோட்டக்கலைத்துறை அலுவலர் மைதிலி தலைமையிலான குழுவினர் கணக்கிட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
Advertisement
Advertisement