தந்தி மாரியம்மன் கோவிலில் விடையாற்றி உற்சவம்

குன்னுார்: குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம், 4ம் தேதியில் இருந்து தினமும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில் நடந்து வந்தது. பிராமணர்கள் சங்கம் சார்பில் அபிஷேகம், லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் விடையாற்றி உற்சவம், கஞ்சி வார்த்தல், புஷ்ப ஊஞ்சமலமர்த்தனம் நிகழ்ச்சிகள் நடந்தன. கிளாரினெட் நாகராஜ் குழுவினரின் பக்தி இசை இடம் பெற்றது. அம்மன் திருவீதி உலா மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது.

Advertisement