முத்தாலம்மன் கோயில் திருவிழா

நத்தம்,: நத்தம் அருகே பண்ணுவார்பட்டி, பள்ளபட்டியில் மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது.

நேற்று முன்தினம் இரவு பண்ணுவார்பட்டியில் செய்யப்பட்ட முத்தாலம்மன் தீவட்டி பரிவாரங்கள், வானவேடிக்கைகளுடன் ஊர்வலம் நடந்தது.

அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பால்குடம், அக்கினிசட்டி,மாவிளக்கு, கிடாய்கள் வெட்டி நேர்த்திக்

கடன்களை செலுத்தினர். நேற்று மாலை வர்ணக் குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊராளிபட்டி, சீரங்கம்பட்டியில் உள்ள மந்தை முத்தாலம்மன் கோயில் திருவிழாவும் இதேபோல் நடந்தது.

Advertisement