எரியாத தெருவிளக்கு

தேவகோட்டை: தேவகோட்டை வழியாக திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.

சிவாந்தகோட்டை பகுதியில் இந்த சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலை துறையினரால் விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்த விளக்குகள் சில மாதங்களாக எரியவில்லை. இந்த ரோட்டில் தொடர்ந்து போக்குவரத்து இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு கூட சில நேரங்களில் நடக்கிறது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சம்பந்தப்பட்ட சிவாந்த கோட்டை மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் எரிய விட வேண்டும் என மக்கள் வேண்டுகின்றனர்.

Advertisement