டிஜிட்டல் கிராப் சர்வே பணி தீவிரம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் பயிர்களின் சாகுபடி பரப்பு குறித்த டிஜிட்டல் கிராப் சர்வே எடுக்கும் பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
கோடை பருவத்தில் தென்னை, பழப்பயிர்கள், காய்கறி பயிர்கள், பயறு வகை, எள், உளுந்து, பாசிப்பயறு, சோளம், மக்காச்சோளம் பரப்பு குறித்த சர்வே எடுக்கும் பணிகள் ஏப். 28ல் துவங்கியது. இதுவரை 85 சதவீதப்பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் மே 15க்குள் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் பாண்டியன் கூறியதாவது: இந்த சர்வே பணிகள் மூலமாக இனி வரும் காலங்களில் விவசாயிகளின் தரவுகளை இணையத்தில் இருந்து எடுத்துக்கொள்ளலாம். இது போன்று டிஜிட்டல் முறை பயிர் கணக்கீடு செய்வதால் கடந்தாண்டை விட நடப்பாண்டு கூடுதல் சாகுபடி நடந்துள்ளதா என்பதை அறிய முடியும். பேரிடர் மேலாண்மையின் போது பயிர் சேதத்தை துல்லியமாக கணக்கிட்டு அதற்கேற்ப இழப்பீடு வழங்க முடியும் என்றார்.
மேலும்
-
பயங்கரவாத முகாம்கள் அழிப்பு; புதிய வீடியோ வெளியிட்டு ராணுவம் விளக்கம்!
-
ராணுவத்திற்கு உதவ தயார்; சண்டிகரில் குவிந்த இளைஞர்கள்!
-
அரசு பள்ளியில் சாதனை
-
போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்