கோயில் திருவிழா
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி காந்திபுரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் எல்லை காவல்காரன் பூஜையுடன் அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார். பக்தர்கள் மாவிளக்கு பூஜை நடத்தினர். நேர்த்திக்கடன் செலுத்தினர். இறுதி நாளில் பொங்கல் வைக்கப்பட்டு, முளைப்பாரி ஊர்வலம், வான வேடிக்கையுடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தார்.
நத்தம்: குட்டூர் மந்தை முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு முதல்நாள் இரவு தீவட்டி பரிவாரங்கள், வானவேடிக்கைகளுடன் முத்தாலம்மன் ஊர்வலம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, மாவிளக்கு, கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன்களை செலுத்தினர். நேற்று மாலை வர்ணக் குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு பள்ளியில் சாதனை
-
போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
-
போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை
-
அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி
Advertisement
Advertisement