தரம் குறைவான தங்கத்தை அடகு வைத்தவர் மீது வழக்கு
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராஜா பீமாராவ் 53. இவர் மூன்றாந்தல் பகுதியில் 'அக்ரோ இண்டஸ் கிரெடிட்ஸ் லிமிடெட்' தனியார் நிதி வங்கி நிறுவனத்தில்,
இந்தாண்டு பிப்ரவரி 7ல் 68 கிராம் எடையுள்ள தங்க செயினை அடகு வைத்து ரூ.3.53 லட்சம் கடன் பெற்றார். தலைமை அலுவலகத்திலிருந்து ஆண்டாய்வுக்கு வந்த நகை மதீப்பீட்டாளர்கள் நகைகளின் உண்மைத்தன்மை குறித்து சோதனையிட்டனர். இதில் ராஜா பீமாராவ் அடகு வைத்த தங்க செயின் தரம் குறைவாக போலி என தெரிந்தது. வங்கி கிளை மேலாளர் வேல்முருகன், ராஜா பீமாராவ்வை அலைபேசியில் அழைத்தும் வங்கிக்கு வரவில்லை. போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேல்முருகன் புகாரில், தென்கரை எஸ்.ஐ., கர்ணன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
-
போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை
-
அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி
-
ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி
-
போர் பதற்றம் எதிரொலி; பயத்தில் பெட்ரோல், டீசல் நிலையங்களை மூடியது பாகிஸ்தான்!
-
பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி
Advertisement
Advertisement