ராணுவ வீரர்களுக்கு துணை நிற்க வேண்டும்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, இந்திய ராணுவ வீரர் முரளி நாயக், பாகிஸ்தான் நடத்திய தொடர் பீரங்கி தாக்குதலில் வீரமரணம் அடைந்தது, பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. நம்மை காப்பதற்காக இன்னுயிர் ஈந்த வீரருக்கு வீர வணக்கங்கள்.

பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தான், நம் நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல்களை ஏவி வருகிறது. அவற்றிலிருந்து நாட்டையும், நம்மையும் காக்கும் புனிதப் பணியில், தங்களின் உயிரை பணயம் வைத்து, நம் படைவீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மிகவும் நெருக்கடியான இந்த காலகட்டத்தில், நாம் அனைவரும் ஒன்று பட்டு, அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்.

-- அன்புமணி

பா.ம.க., தலைவர்

Advertisement