கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு காயம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு, 100, வீட்டில் தவறி விழுந்ததில் காயம்அடைந்தார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு, வயது மூப்பு காரணமாக, சென்னை நந்தனத்தில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, கழிப்பறை செல்ல எழுந்தபோது, தடுமாறி கீழே விழுந்தார். கட்டிலில் இருந்த இரும்பு தகடு மீது விழுந்ததால், அவரது காதில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நேற்று வீடு திரும்பினார். நல்லகண்ணுவுக்கு பல்வேறு கட்ட பரிசோதனை செய்யப்பட்டதில், அச்சப்படும் வகையில் பாதிப்பு எதுவும் இல்லை என, டாக்டர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (1)
N Sasikumar Yadhav - ,
10 மே,2025 - 08:22 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ராணுவத்திற்கு உதவ தயார்; சண்டிகரில் குவிந்த இளைஞர்கள்!
-
அரசு பள்ளியில் சாதனை
-
போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
-
போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை
Advertisement
Advertisement