கோவைக்கு ரூ.65,000 கோடி கடன் இலக்கு வங்கியாளர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

கோவை: கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்,மாவட்ட அளவிலான மாதாந்திர வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில், 2025--2026ஆண்டிற்கான, கோவைமாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட புத்தகத்தை, கலெக்டர் வெளியிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும், நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்துக்கும், வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது.

அதனடிப்படையில், கோவைமாவட்டத்தில் வங்கிகள் மூலம்,2025--2026ம் ஆண்டில் ரூ.64,900 கோடிக்கு கடன் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டிற்கானகடன் திட்டத்தில், விவசாயத்துக்கு 24,850 கோடி ரூபாயும், சிறு, குறு நடுத்தர தொழில் மையத்துக்கு, 38,000கோடி ரூபாயும்,பிற முன்னுரிமை கடன்களுக்கு 2,050 கோடி ரூபாய் என மொத்தம் 64,900 கோடி ரூபாய் கடன் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன், நபார்டு வங்கி துணை பொது மேலாளர் திருமலாராவ், மகளிர் திட்ட இயக்குனர் மதுரா, தாட்கோ மேலாளர் மகேஸ்வரி உள்ளிட்ட வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement