உரிமம் ரத்து செய்த ஆலையில் பட்டாசு தயாரித்தவர் கைது

சிவகாசி : சிவகாசி திருத்தங்கலை சேர்ந்தவர் ராமலட்சுமி. இவருக்கு செங்கமலபட்டியில் ஸ்ரீமதி பட்டாசு ஆலை உள்ளது. விதி மீறி பட்டாசு தயாரித்ததால் ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

சிவகாசி முனீஸ்வரன் காலனியைச் சேர்ந்த முத்துக்குமார் 50, உரிமம் ரத்து செய்யப்பட்ட இந்த ஆலையை குத்தகைக்கு எடுத்து போர்மேன் தாமஸ் என்பவரின் மேற்பார்வையில் அரசு விதிமுறைகளை மீறி ஆட்களை வைத்து திறந்தவெளியில் பாதுகாப்பு ஏதும் இல்லாமல் பட்டாசுகளை தயாரித்தார். கிழக்கு போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து முத்துக்குமாரை கைது செய்து, ராமலட்சுமி, தாமசை தேடுகின்றனர்.

Advertisement