வியாபாரிகள் சாலை மறியல்
தாராபுரம்: தாராபுரம், அண்ணா நகரில் உழவர் சந்தை செயல்படுகிறது. சந்தைக்கு அருகே பொள்ளாச்சி ரோட்டில் விவசாயிகள் அல்லாத நபர்கள் வெளி நபர்கள் ரோட்டோரம் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதனால், வியாபாரம் பாதிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் நேற்று காலை ரோட்டோரம் இருந்த கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற தாராபுரம் போலீசார் பேச்சு நடத்தினர். பேச்சுவார்த்தை முடியும் வரை கடைகளை அகற்ற கூடாது என கூறிய வியாபாரிகள், போராட்டத்தை கைவிட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலீஸ் மக்கள் மன்றத்தில் 54 புகார்களுக்கு உடனடி தீர்வு
-
என்.ஆர்.காங்., மகளிரணி அறிமுக கூட்டம்
-
புளு ஸ்டார் ஆங்கில பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
-
காங்., பாணியில் தலைதுாக்கும் தமிழக பா.ஜ.,கோஷ்டி அரசியல்
-
போரை நிறுத்துங்க! 'ஹாட்லைன்' கலந்துரையாடலில் கதறிய பாக்., டி.ஜி.எம்.ஓ.,
-
திருட்டு பயத்தை குறைக்க வந்தாச்சு 'ஸ்டார்ட்அப்'
Advertisement
Advertisement