மாரியம்மன் கோவில் திருவிழா மஞ்சள் நீராடலுடன் நிறைவு
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, இரண்டு வாரங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, கம்பம் நடும் விழா நடந்தது. அதையொட்டி, தினமும் சிறப்பு அலங்காரம், மண்டகப்படி ஊர்வலம், பால் அபிஷேகம், அலகு குத்தும் நிகழ்ச்சி, அக்னி சட்டி ஊர்வலம் ஆகியவை நடந்தன. கடந்த புதன் கிழமை காலை தீமிதி விழா, மாலை தேர் திருவிழா நடந்தது.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் ஆபரண உடையணிந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பஸ் ஸ்டாண்டில்
வாணவேடிக்கை நடத்தப்பட்டது.
தொடர்ந்து கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், கொடியிறக்கமும் நடந்தது. நேற்று மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து சேலத்தில் வீட்டில் இருந்த தம்பதி கொலை
-
சத்தீஸ்கரில் யானை தாக்கி பெண்கள் இருவர் மரணம்
-
இந்திய தாக்குதலில் சேதமடைந்த பயங்கரவாத முகாம்கள்: வீடியோ வெளியீடு
-
தொடங்கியது சித்திரை முழு நிலவு மாநாடு!
-
இந்தியா தாக்குதலில் முக்கிய பயங்கரவாதிகள் பலி: உறுதி செய்தது ராணுவம்
-
பாகிஸ்தானும் பயங்கரவாதமும்... ஆதாரத்துடன் ஐ.நா.,வை நாடும் இந்தியா!
Advertisement
Advertisement