ரயிலில் மது , குட்கா கடத்திய 3 பேர் கைது

திருநெல்வேலி:பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் சென்ற ரயிலில் மது பாட்டில்கள், குட்கா கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் சென்ற ரயிலில் திருநெல்வேலி ஸ்டேஷனில் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். முன் பதிவில்லா பெட்டியில் 3 பேர், மதுபாட்டில்கள், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வைத்திருந்தனர். விசாரணையில் அவர்கள் துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த செல்வராஜ் 38, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை கீழ கல்குறிச்சி சச்சின் 21, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த முத்துராமன் 34, எனத்தெரிந்தது. அதனை கடத்திய அவர்கள் கைது செய்யப்பட்டனர். குட்கா மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement