குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனத்தை இயக்கிய பெண் துாய்மை பணியாளர்கள்

சிவகாசி : சிவகாசி அருகே ஆணையூர் ஊராட்சியில் குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களை ஆண்களுக்கு இணையாக பெண் துாய்மை பணியாளர்கள் இயக்கி குப்பைகளை சேகரிக்கின்றனர்.
சிவகாசி அருகே ஆணையூர் ஊராட்சியில் துாய்மை பாரத இயக்கத்தின் கீழ் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளன. இங்கு ஆண் பெண் என 40 க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணி புரிகின்றனர். பொதுவாக இந்த வாகனங்களை ஆண் தூய்மை பணியாளர்களே இயக்கி குப்பைகளை சேகரிப்பர். ஆனால் இங்கு ஆண்களுக்கு இணையாக 15 வாகனங்களை பெண் துாய்மை பணியாளர்கள் இயக்கி குப்பை சேகரிக்கின்றனர். சரியான நேரத்திற்கு சென்று குப்பைகளை சேகரிக்கும் இவர்களை மக்கள் பாராட்டுகின்றனர்.
பெண் துாய்மை பணியாளர்கள் கூறுகையில், தள்ளுவண்டிகளில் தெருக்களில் சென்று குப்பைகளை சேகரிப்பது வழக்கம். பேட்டரி வாகனங்கள் இருப்பதால் அதனை இயக்குவதற்கு பழகியுள்ளோம். இந்த வாகனம் எளிதாக இருப்பதால் குறுகிய தெருக்களில் கூட சென்று குப்பைகளை சேகரிக்கின்றோம் என்றனர்.
மேலும்
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? காலை 11 மணிக்கு ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது