பிரான்மலையில் தீர்த்தவாரி

பிரான்மலை : சிங்கம்புணரி அருகே பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் தீர்த்தவாரி நடந்தது.

இக்கோயிலின் சித்திரைத் திருவிழா மே 1ல் தொடங்கியது. 10 நாள் மண்டபடியாக தினமும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. மே 5ல் திருக்கல்யாணம், மே 9 ல் சித்திரை தேரோட்டம் நடந்தது.

10ம் நாளான நேற்று தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது.

மண்டகப்படியில் இருந்து சுவாமி, அம்பாள் தீர்த்தவாரி குளத்திற்கு முன் எழுந்தருளினர்.

சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement