காங்., ஜெய்ஹிந்த் ஊர்வலம்

திண்டுக்கல் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்டதை கண்டித்தும், இந்திய ராணுவத்தினர் எதிர்தாக்குதல் நடத்தியதிற்கு ஆதரவு தெரிவித்து பாராட்டும் விதமாக திண்டுக்கல்லில் காங்., சார்பில் ஜெய்ஹிந்த் ஊர்வலம் மாநகர் தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் நடந்தது.

ஊர்வலம் திண்டுக்கல் காமராஜர் சிலை வளாகத்தில் துவங்கி வெள்ளை விநாயகர் கோயில், பெரிய கடை வீதி கடந்து மார்க்கெட் ரோடு வழியாக குமரன் பூங்கா அருகே நிறைவடைந்தது. மாவட்ட மாநகர காங்., இளைஞர், மாணவர், சிறுபான்மையினர் பிரிவு சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

Advertisement