பழநியில் சித்திரை திருவிழா தேரோட்டம்

பழநி,: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மேற்கு ரத வீதி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் சித்திரை திருவிழா மே 2 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி ரத வீதி உலா நடைபெற்றது.

மே 8 ல் திருக்கல்யாணம் , நேற்று காலை 8:09 மணிக்கு திருத் தேரோட்டம் நடைபெற்றது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, பழநி கிரி விதி கந்த விலாஸ் உரிமையாளர் செல்வகுமார் பங்கேற்றனர்.

இன்று இரவு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

Advertisement