வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்
பரமக்குடி: தேனி மாவட்டம் போடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு அமாவாசை என்பவரது அம்மாவுக்கு திதி கொடுக்க ராமேஸ்வரம் நோக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேர் வந்துள்ளனர். போடியைச் சேர்ந்த டிரைவர் ரகு வேனை ஓட்டினார்.
பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலை வாகைக்குளம் பாலம் இறக்கத்தில் டிரைவர் துாக்க கலக்கத்தில் இருந்த நிலையில் வேன் கவிழ்ந்தது. இதில் செல்லப்பாண்டி, விஜயேந்திரன் உட்பட 16 பேர் பலத்த காயமடைந்தனர்.
அனைவரும் பரமக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உறவினர் சிவசாமி புகாரில் தாலுகா போலீஸ் எஸ்.ஐ., பிரிட்டோ விசாரிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது
-
கல்வித்தரம் உயர்ந்தால் 'நீட்' தேர்வு எளிது
Advertisement
Advertisement