இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பொதுமக்கள் பீதி

சுமத்ரா: இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடாக இந்தோனேசியா இருந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 4 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. கடைசியாக சுலவெசி பகுதியில் கடந்த வாரம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவானது.
இந்த நிலையில், வடக்கு சுமத்ரா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 89 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வினால் கட்டடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் இந்தோனேசிய மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதிப்பு
-
எல்லையில் தணிந்தது பதற்றம்; மூடப்பட்ட 32 விமான நிலையங்களை திறக்க மத்திய அரசு உத்தரவு
-
ஆதரவற்ற மாணவர்களை அடையாளம் காட்டுங்கள்
-
சென்னையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கோலி
-
மாலத்தீவுக்கு ரூ.420 கோடி நிதி வழங்கி இந்தியா தாராளம்!
Advertisement
Advertisement