கல்லுாரி மாணவி மாயம்

குளித்தலை: குளித்தலை அடுத்த, நங்கவரம் சவாரி மேட்டை சேர்ந்தவர் செல்-வராஜ், 52, விவசாயக் கூலி தொழிலாளி.


இவரது மகள் வர்ஷினி, 19, திருச்சி தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 8 காலை, 8:00 மணியளவில் வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்று வருவதாக கூறி விட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த
வித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என தந்தை கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement