ஆ.தாமரையால் வாய்க்காலில் நீரோட்டம் தடைபடும் சூழல்
ஈரோடு: ஈரோடு காரை வாய்க்கால் பகுதியில் காலிங்கராயன் வாய்க்கால் செல்கிறது. இப்பகுதியில் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளதால், நீரோட்டம் கேள்விக்குறியாகி வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: காரை வாய்க்கால் பகுதி காலிங்கராயன் வாய்க்காலில் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது. ஏப்.,30ல் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
ஒரு மாதத்தில் மீண்டும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்நிலையில் வாய்க்காலில் ஆகாயத்தா-மரை ஆக்ரமித்துள்ளதால், நீரோட்டம் வெகுவாக தடைபடும். வாய்க்காலில் தண்ணீர் தேங்கி கரையில் வெளியேறும் நிலை உள்-ளது. விரைந்து ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement