இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிறைவு!

புதுடில்லி: இந்தியா- பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று 12ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த மே 7ம் தேதி அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், ஒன்பது இடங்களில் பயங்கரவாதிகளின் முகாம்கள், தலைமையகங்களை இந்திய ராணுவம் குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியது. இதை எதிர்த்து பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் பாகிஸ்தான், ட்ரோன்களை வீசி தாக்கியது.
இந்தியா - பாகிஸ்தான் மோதல், மேலும் தீவிரமாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள சம்மதித்தன. நேற்று முன் தினம், மாலை 5:00 மணியில் இருந்து போர் நிறுத்தம் அமல் ஆனது.
இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையே இன்று (மே.12) பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று பகல் 12 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தை, இன்று மாலை நடத்தப்பட்டது. இரு நாடுகளை சேர்ந்த டி.ஜி.எம்.ஓ., அதிகாரிகள் போன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.






















மேலும்
-
மே 17ல் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
பீஹாரில் மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!
-
டிக்டாக் நேரலையில் மாடல் அழகி சுட்டுக்கொலை; மெக்சிகோவில் அதிர்ச்சி
-
வக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு: மே 20க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு
-
பாகிஸ்தானிடம் அணு ஆயுதம்; சர்வதேச அமைப்புக்கு ராஜ்நாத் கேள்வி!
-
கூடுதல் நிதி ஒதுக்காமல் புதிய பயனாளிகளுக்கு ரூ.1,000 எப்படி கொடுப்பீங்க: ராமதாஸ் கேள்வி