எதையுமே செய்யவில்லை!

பாக்., உடன் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு முன், அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியிருக்க வேண்டும். அது போல, பார்லி., சிறப்பு கூட்டத்தொடரையும் நடத்தியிருக்க வேண்டும். ஏனெனில் இது ஒரு தீவிரமான பிரச்னை. ஆனால், இதில் எதையுமே பா.ஜ., அரசு செய்யவில்லை.
சித்தராமையா
கர்நாடக முதல்வர்,
காங்கிரஸ்
ராகுல் அறைகூவல் ஏன்?
பார்லிமென்டில் முக்கிய மசோதாக்கள் மீது விவாதம் நடக்கும் போது, ராகுலும், அவரது சகோதரி பிரியங்காவும் அதன் பக்கமே எட்டி பார்ப்பதில்லை. சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என ராகுல் தற்போது அறைகூவல் விடுப்பது ஏன்? இதை புரிந்து கொள்ள முடியவில்லை.
ராஜிவ் சந்திரசேகர்
முன்னாள் மத்திய அமைச்சர்,
பா.ஜ.,
பயங்கரவாதிகள் எங்கே?
பஹல்காம் தாக்குதலில், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், இந்த தாக்குதலை நடத்திய ஐந்து பயங்கரவாதிகள் இன்னும் பிடிபடவில்லை. அப்படி இருக்கையில், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை வெற்றி என எப்படி கூற முடியும்? இதற்கு யார் பொறுப்பு?
பூபேஷ் பாகேல்
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர், காங்கிரஸ்