நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் எரியாத உயர் கோபுர மின் விளக்கு
நரிக்குடி : நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் உயர் கோபுர மின் விளக்கு எரியாமல் இருளாக இருப்பதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.
நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் போதிய அடிப்படை வசதிகள் கிடையாது. இருக்கும் உயர் கோபுர மின் விளக்கும் 10 நாட்களாக எரியவில்லை. மழையின் போது இடி, மின்னலுக்கு உயர் கோபுர மின்விளக்குகள் அடிக்கடி பழுதாகின. அவ்வப்போது சரி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மே 1ல் மீண்டும் பழுதடைந்து எரியாமல் போனது. 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை சரி செய்யவில்லை. தற்போது இருளாக இருப்பதால் பயணிகள் தவிர்த்து வருகின்றனர்.
இரவு 11:00 மணி வரை பஸ் வசதி இருப்பதால் பயணிகளின் நடமாட்டம் இருக்கும். இருளாக இருப்பதை சாதகமாக பயன்படுத்தி திருட்டு சம்பவம் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே பழுதடைந்த உயர் கோபுர மின் விளக்கை உடனடியாக சரி செய்து, எரிய விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.
மேலும்
-
பணி அனுபவ சான்றிதழ் வழங்க ரூ 60 ஆயிரம் லஞ்சம்; கல்வி அலுவலர் கைது
-
மேயர் வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை:மெக்சிகோவில் பதற்றம்
-
பொள்ளாச்சி வழக்கில் தண்டனை அறிவிப்பு; தலைவர்கள் கருத்து!
-
அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவக்கம்; தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'