போலீசிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே சிந்துவம்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜபாண்டி 19. ஜெயமங்கலம் குள்ளப்புரம் ரோட்டில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றிக்கொண்டிருந்தார்.

ஜெயமங்கலம் போலீசாரை அவதூறாக பேசி, கத்தியால் மிரட்டினார்.

எஸ்.ஐ., முருகப்பெருமாள், ராஜாபாண்டியை கைது செய்து கத்தியை கைப்பற்றினார்.

Advertisement