புதிய அருங்காட்சியகம் கலெக்டர் ஆய்வு
விருதுநகர் : விருதுநகரில் புதிய அருங்காட்சியகத்தில் ரூ.6.8 கோடிக்கு கட்டப்பட்டு வருவதை கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார்.
மாவட்ட விளையாட்டு அரங்க மைதானம் அருகில் அருங்காட்சியகங்கள் துறை சார்பில் புதிய அருங்காட்சியகம் ரூ.6.8 கோடிக்கு கட்டப்பட்டு வருவதை கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டார். மாவட்டத்தில் அரசு அருங்காட்சியகம் 2001ல் துவங்கப்பட்டது. வாடகை கட்டடத்தில் இயங்கி வந்ததால் தற்போது புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கி பணிகள் நடந்து வருகிறது.
இந்த புதிய கட்டடத்தில் தரை தளத்தில் 6 காட்சி கூடங்கள், முகவுரை காட்சி கூடம், அரசியல் தொடர்பான காட்சி கூடம், முந்தைய வரலாற்று காட்சி கூடம், நாணயவியல் காட்சி கூடம், ஆய்தவியல் காட்சி கூடம், இசை மற்றும் கலை தொடர்பான காட்சி கூடம் மற்றும் 2 கல்வெட்டு காட்சி கூடங்களும், முதல் தளத்தில் சிறப்பு கண்காட்சி பகுதி, நிர்வாக அறை, குழு அறை, கண்காணிப்பாளர் அறையும், இரண்டாம் தளத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் வைப்பு அறையும் மொத்தம் 17,409 சதுரடி பரப்பளவில் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
மேலும்
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்