ஊழியர் சங்க பேரவை கூட்டம்
சிவகங்கை : காளையார்கோவிலில்டாஸ்மாக் ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் திருமாறன் தலைமை வகித்தார். செயலாளர் குமார் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் பாண்டி வரவு செலவு அறிக்கை வாசித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட பொது செயலாளர் சேதுராமன் துவக்கி வைத்தார்.
மாநில தலைவர் முருகன், மின் ஊழியர் மத்தியகூட்டமைப்பு மாநில செயலாளர் உமாநாத், மாநில துணை தலைவர் தனுஷ்கோடி, மாநில துணை செயலாளர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சம்மேளன பொது செயலாளர் திருச்செல்வம் நிறைவுரை ஆற்றினார்.
புதிய மாவட்ட தலைவராக குமார், செயலாளர் திருமாறன், பொருளாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் தேர்வாகினர். 22 ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை நிர்வாகத்தில் பின்பற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
மேலும்
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்