புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

குரங்கு தொல்லையால் அவதி



சங்கராபுரம் பகுதியில் குரங்குகள் தொல்லையால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-ராமன், சங்கராபுரம்.

நிழற்குடை தேவை



கள்ளக்குறிச்சி அடுத்த காரனுார் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபாகரன், காரனுார்.

போக்குவரத்து பாதிப்பு



சங்கராபுரம் கடைவீதியில் நாள்தோறும் நிலவும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருவதால் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

- கோபால், சங்கராபுரம்.

மின்விளக்குகள் அமைக்கப்படுமா?



மூங்கில்துறைப்பட்டு பகுதியில் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் பொருட்டு சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ், மூங்கில்துறைப்பட்டு.

ஏரியில் ஆபத்தான குளியல்



மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனுார் ஏரியில் ஆபத்தான வகையில் குளிக்கும் சிறுவர்களை எச்சரிக்கும் வகையில் விழிப்புணர்வு பலகை அமைக்க வேண்டும்.

-மதியழகன், கடுவனுார்.

Advertisement