ஜவுளி சந்தையில் புதிய ரக ஆடைகள் விற்பனை விர்ர்

ரோடு,ஈரோடு ஜவுளி சந்தையில், நேற்று புதிய ரக ஆடைகள் வரத்துடன், சில்லறை விற்பனை கூடுதலாக நடந்தது.

இதுபற்றி கனி மார்க்கெட் வாரச்சந்தை கடை வியாபாரிகள் கூறியதாவது: கோடை காலமாக உள்ளதால் புதிய காட்டன் ரகங்கள் அதிகமாக வரத்தாகி உள்ளது.


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில வியாபாரிகள், மக்கள் வந்தனர். பள்ளி யூனிபார்ம் செட், காட்டன் ரகங்களில் துண்டு, லுங்கி, வேட்டி, பனியன், ஜட்டி, நைட்டி, காட்டன் புடவைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் அதிகமாக வாங்கினர். சில்லறை விற்பனை, 40 சதவீதம், மொத்த விற்பனை, 15 சதவீதம் நடந்தது. இவ்வாறு கூறினர்.

Advertisement