அக்குமாரியம்மன் கோவில் திருவிழா

பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சோமனஅள்ளியில், அக்குமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, கடந்த, 9ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, நேற்று அதிகாலை முதலே அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சோமனஅள்ளி, கசியம்பட்டி, பி.கொல்லஅள்ளி உள்ளிட்ட, 12 கிராம மக்கள் பொங்கல் வைத்தும், அம்மனுக்கு கூழ் ஊற்றியும், மாவிளக்கு, பூங்கரகம், பால்குடம் எடுத்து வந்தும் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்கள் அலகு குத்தியும், பல்வேறு சுவாமி வேடங்கள் அணிந்தும் ஊர்வலமாக வந்து


ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவிற்கு வந்த பக்தர்கள் சாட்டை அடி வாங்கியும், வேப்பிலையை தங்கள் வீட்டிற்கும் வாங்கிச் சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement