சிறுமியை திருமணம் செய்த கொத்தனார் போக்சோவில் கைது
அரியாங்குப்பம்:சிறுமியை திருமணம் செய்த கொத்தனார் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
அரியாங்குப்பம் அடுத்த சின்ன இருசாம்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன்,28; கொத்தனார். இவர், 16 வயது சிறுமியுடன் பழகி வந்தார். சிறுமியை கடந்த 7ம் தேதி முதல் காணவில்லை.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், வீட்டில் இருந்த சிறுமியை, லட்சுமணன் திருப்பதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்து திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார், உறவினர் வீட்டில் தங்கியிருந்த லட்சுமணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியை மீட்டு புதுச்சேரியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும்
-
சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து; ரசாயன நீரால் மக்கள் அவதி!
-
மெக்சிகோவில் பஸ் - டிரக் மோதிய விபத்தில் 21 பேர் பலி
-
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!
-
வனப்பகுதியில் 'ட்ரோன்' இயக்க தடை; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
-
ராணுவவீரர்களை அவமதித்து பேசினாரா செல்லுார் ராஜூ?
-
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்