சிறப்பாக பணிபுரிந்த எஸ்.ஐ.,  போலீசாருக்கு டி.ஐ.ஜி பாராட்டு 

ராமநாதபுரம்: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சிறப்பாக பணிபுரிந்த எஸ்.ஐ., போலீசாருக்கு டி.ஐ.ஜி மூர்த்தி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பணிபுரியும் போலீசாருக்கான குற்றங்களை கண்டறியும் குழு கூட்டம் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., அலுவலகத்தில் நடந்தது.

இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஒரு எஸ்.ஐ., 10 போலீசாருக்கும், சிவகங்கை மாவட்டத்தில் இரு எஸ்.ஐ., எட்டு போலீசாருக்கும் டி.ஐ.ஜி., மூர்த்தி பாராட்டுசான்றிதழ்களை வழங்கினார்.-

Advertisement