மருந்தாகும் சாறு

ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விதமான உணவு கவனம் பெறுகிறது. குறிப்பாக இயற்கையான காய்கறி, பழங்களில் உள்ள மருத்துவ குணங்கள் கண்டறியப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு 'டார்ட் செர்ரி' எனும் ஒரு பழம் ஆய்வாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
பேக்கரி பொருட்களில் மட்டுமே பயன்பட்டு வந்த இந்த பழம் தற்போது மருந்தாகவும் பயன்படுகிறது. முதன்முதலாக 2011ம் ஆண்டு இந்த பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்து சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2023ம் ஆண்டு இது துாக்கமின்மையை சரி செய்வதாகக் கண்டறியப்பட்டது.
இந்த பழத்தில் மெலடோனின் என்ற ஒரு ஹார்மோன் இருக்கிறது. இது நல்ல துாக்கத்திற்கு அவசியமானது. அதேபோல இதில் உள்ள ட்ரைப்டோஃபான் எனும் ஒருவித அமினோ அமிலம் நம்முடைய உடலுக்கு மிகவும் நல்லது. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
இது குறித்து ஆய்வு செய்த இங்கிலாந்து விஞ்ஞானிகள் இந்த பழத்தின் சாற்றை மருந்துக்குப் பதிலாகப் பயன்படுத்த முடியாது, அதே நேரத்தில் மருந்துடன் சேர்த்து எடுத்து கொண்டால் விரைவில் குணமடையலாம் என்கின்றனர்.
இந்த பழச்சாற்றை எந்த வடிவில், எவ்வளவு உட்கொண்டால் முழுப் பயனை பெற முடியும் என்று ஆய்வுகள் நடந்தபடி உள்ளன.
மேலும்
-
நாட்டுக்காக பேசுகிறேன்; கட்சிக்காக அல்ல: விமர்சனத்துக்கு சசி தரூர் பதில்
-
இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர்
-
மே18ல் 101வது ராக்கெட்டை ஏவுகிறது இந்தியா; விளக்கினார் இஸ்ரோ தலைவர் நாராயணன்!
-
தே.ஜ., கூட்டணியில் தான் நீடிக்கிறோம்: ஓ.பி.எஸ்.,
-
'ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்': நக்சல்களின் முதுகெலும்பை உடைத்த பாதுகாப்பு படையினர்
-
பிறந்தநாள் விழாவில் அசைவம் சாப்பிட்டவர் உயிரிழப்பு: புதுக்கோட்டை அருகே சோகம்