ஒட்டகப் பந்தயம் அறிமுகம்: ஆசிய யூத் விளையாட்டில்

மனாமா: பஹ்ரைனில் நடக்கவுள்ள ஆசிய யூத் விளையாட்டில் ஒட்டகப் பந்தயம் அறிமுகமாகிறது.
பஹ்ரைன் தலைநகர் மனாமாவில், வரும் அக். 22-31ல், ஆசிய யூத் விளையாட்டு 3வது சீசன் நடக்கவுள்ளது. இதில் தடகளம், பாட்மின்டன், நீச்சல், டேபிள் டென்னிஸ், பளுதுாக்குதல் உள்ளிட்ட 24 வகையான விளையாட்டுகள், 207 பிரிவுகளில் நடக்க உள்ளன.
பாரம்பரிய பாலைவன விளையாட்டான ஒட்டகப் பந்தயம், முதன்முறையாக நடத்தப்படுகிறது. இப்போட்டி 15 முதல் 18 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான 500 மீ., ஓட்டமாக நடக்கவுள்ளது. இதில் இந்தியா, பஹ்ரைன் உட்பட 8 நாடுகள் பங்கேற்கின்றன.
ஒட்டகப் பந்தயம் தவிர, இம்முறை குத்துச்சண்டை, சைக்கிள் பந்தயம், குதிரையேற்றம், புட்சால், டிரையத்லான், வாலிபால், மல்யுத்தப் போட்டிகளும் அறிமுகமாகின்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திட்டச் சாலையை மறு அளவீடு செய்ய தேனி நகராட்சி பரிந்துரை
-
பிரதமர் விபத்து காப்பீட்டு திட்டத்தில் மே 31க்குள் பதிவு செய்யலாம் முன்னோடி வங்கி மேலாளர் தகவல்
-
இ---நாம் திட்டத்தில் 4588 டன் விளைபொருட்கள் விற்பனை: தேனி விற்பனைகுழு செயலாளர் தகவல்
-
உரக்கூடத்தை பயன்படுத்தாமல் குப்பைக்கு தீ வைக்கும் அவலம்
-
பழங்குடியினருக்கு பருவமழைக்கு முன் வீடுகள் கட்டப்படுமா - கானல் நீராகிப் போன வாக்குறுதி
-
கார் மோதி முதியவர் பலி
Advertisement
Advertisement