நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.3,500 வேண்டும்
சென்னை:'நெல் குவின்டாலுக்கு, 3,500 ரூபாய் வழங்க வேண்டும்' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில்,
1 ஏக்கர் நெல் சாகுபடி செய்வதற்கு 36,000 ரூபாய் செலவாகிறது. மத்திய அரசு
குறைந்தபட்ச ஆதரவு விலையாக 100 கிலோ உடைய ஒரு குவின்டாலுக்கு, 2,320 ரூபாய்
வழங்கி வருகிறது. அத்துடன் 105 ரூபாய் சேர்த்து, தமிழக அரசு, 2,425 ரூபாய்
வழங்கி வருகிறது.
இதனால், நெல் விவசாயத்தில் இருந்து விவசாயிகள்
வெளியேறி வருகின்றனர். நாட்டின் நெல் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு,
8.62 சதவீதத்தில் இருந்து, 5.64 சதவீதமாக குறைந்துள்ளது. அரிசிக்காக
தமிழகம், கர்நாடகா, ஆந்திராவை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில், குவின்டாலுக்கு
3,500 ரூபாய் வழங்கி, நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும்
-
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சி; முதல்வர் துவக்கி வைத்து பார்வையிட்டார்
-
அனைத்து மாவட்டங்களிலும் களமிறங்க பா.ஜ., திட்டம்
-
மின்வாரியத்தில் களப்பணியாளர் பற்றாக்குறையால் மன உளைச்சல்; புதிய நியமனம் எப்போது என எதிர்பார்ப்பு
-
மோசமான வானிலையால் வட்டமடித்த விமானம்
-
வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் அலுவலகங்களில் விஜிலென்ஸ் ரெய்டு; நுாறு போலி பாஸ்போர்ட்கள் பறிமுதல்
-
நீர்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; உதவி இயக்குநரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்