9 மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்

சென்னை: 'தமிழகத்தில் இன்று (மே 16) 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை (மே 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 19ம் தேதி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும்
-
சீனா, அமெரிக்காவை விட வளர்ச்சி அடையும் இந்திய பொருளாதாரம்: ஐ.நா., ஆய்வறிக்கை
-
பெயர் மாறும் கயா நகரம்: பீஹார் அமைச்சரவையில் ஒப்புதல்
-
வைஷாலி நான்காவது இடம்
-
சிந்து நதி நீர் விவகாரம்: மாறி மாறி விமர்சனம் செய்யும் உமர் அப்துல்லா - மெகபூபா முப்தி
-
யார் இந்த ரத்தீஷ்; டாஸ்மாக் விவகாரத்தில் அ.தி.மு.க. கிடுக்கிப்பிடி கேள்வி
-
எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை