இரு பெண்களிடம் நகை திருட்டு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே, இரு பெண்களிடம் செயின் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த குலதீபமங்கலம், முருகன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்தது. இதில், அதே ஊரை சேர்ந்த கண்ணன் மனைவி அஞ்சலை, 48; கலந்து கொண்டார். அங்கு அவரது கழுத்தில் அணிந்து இருந்த, 3 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
இதேபோல, ராஜேந்திரன் மனைவி பூரணி, 50; கழுத்தில் இருந்த, 2 சவரன் செயினும் திருடப்பட்டது. இது குறித்து இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில், மணலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…
-
கட்டுமான பணிக்கு 'எம் சாண்ட்' பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை!
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…
-
பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?
-
உயில் அடிப்படையில் சொத்து வாங்கும் போது விசாரிக்க வேண்டியவை!
Advertisement
Advertisement