நியூ பிரின்ஸ் பள்ளிகள் 10, பிளஸ் 2வில் 'சென்டம்'
சென்னை:சென்னை உள்ளகரம் நியூ பிரின்ஸ் சீனியர் செகண்டரி பள்ளியில், 2024 - 25ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்வெழுதிய 76 மாணவர்களும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
அவர்களில், ஜிசேஷ்குமார் 481; அஸ்வத் 475; சூரஜ் 474 மதிப்பெண்கள் பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்து உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வெழுதிய 49 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் தனுஷ், கணினி அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்ணுடன் மொத்தம் 487 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். கவின் 465; முகுந்த் 461 மதிப்பெண்களுடன் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
ஆதம்பாக்கத்தில் உள்ள நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியில், 10ம் வகுப்பு தேர்வெழுதிய 76 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவர்களில் நிகிதா 488; ஸ்ரேயாகுமாரி, கணிதத்தில் 100 மதிப்பெண்ணுடன் 485; சோம்நாத் சக்திவேல் 485; கதிர்ஹான் 483 மதிப்பெண்கள் பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வெழுதிய 55 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தகவல் தொழில்நுட்பத்தில் 100 மதிப்பெண்ணுடன் ஜானவி 484; ஹர்ஷிதா 468; கிரிஷ் 467 மதிப்பெண்களுடன் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியரை, நியூ பிரின்ஸ் கல்வி குழும தலைவர் லோகநாதன், செயலர் மற்றும் ஆதம்பாக்கம் பள்ளி முதல்வர் வி.எஸ்.மகாலட்சுமி, உள்ளகரம் பள்ளி முதல்வர் வீணா இளங்கோ உள்ளிட்டோர் வாழ்த்தினர். முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
மேலும்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 70க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
-
தமிழகத்தில் பரவலாக பெய்த கோடை மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…
-
கட்டுமான பணிக்கு 'எம் சாண்ட்' பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை!
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…