தாராபுரத்தில் நள்ளிரவில் தனியார் பஸ் சிறைபிடிப்பு

தாராபுரம்: தாராபுரம் பகுதியை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட பயணிகள், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், பழனி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஈரோடு செல்லும் தனியார் பஸ்சில் ஏற முற்-பட்டனர். பஸ் கிளம்பும்போது ஏறுமாறு கண்டக்டர் மகேஷ்வரன் கூறியுள்ளார்.

குழந்தைகளுடன் ஒரு சிலர் இருந்ததால், ஈரோடு வரை டிக்கெட் எடுத்துக் கொள்கிறோம் என்று கூறியும் கண்-டக்டர் ஏற்காததால், வேறு பஸ்ஸில் ஏறி தாராபுரம் வந்தனர். அதேசமயம் இதுகுறித்து தாராபுரத்தில் உள்ள தங்களின் உறவினர்-களுக்கு தகவல் தெரிவித்தனர்.இதனால் ஆத்திரமடைந்த உறவினர்களின் ஒருவரும், பா.ஜ., நகர தலைவருமான ரங்கநாயகி உள்ளிட்ட பலர், 12:15 மணிய-ளவில் தாராபுரம் வந்த தனியார் பஸ்சை தடுத்து சிறைபிடித்து, கண்டக்டருடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது பணியிலி-ருந்த தாராபுரம் போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்-தனர். நடத்துனர் வருத்தம் தெரிவிக்கவே மக்கள் கலைந்து சென்-றனர்.

Advertisement