கரூர் வட்டாரத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று இரவு குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.
தமிழகத்தில், கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, 100 டிகிரி முதல், அதிகபட்சமாக, 104.9 டிகிரி வரை கோடை வெயிலின் தாக்கம் இருந்தது.

அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு, தமிழகம் முழுவதும் பரவ-லாக கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால், கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகி-றது.
நேற்று கரூர் மாவட்டம், க.பரமத்தியில், 94.1 டிகிரி வெயில் பதி-வானது. இந்நிலையில், நேற்று இரவு, 9:00 மணி முதல் 20 நிமிடம் வரை கரூர் டவுன், திருமாநிலையூர், வெங்கமேடு, பசுப-திபாளையம், காந்தி கிராமம், தான்தோன்றிமலை, செல்லாண்டிப்-பாளையம், சுக்காலியூர், வடிவேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.
அந்த குளிர்ச்சி, கோடை வெயிலால் அவதிப்பட்ட பொதுமக்க-ளுக்கு, சற்று ஆறுதலாக இருந்தது.

Advertisement