கரூர்-கோவை சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர்: கரூர் - கோவை சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.


கரூர் - கோவை சாலையில் தனியார், அரசு பள்ளிகள், ஓட்-டல்கள், டீ கடைகள், கூட்டுறவு வங்கி மற்றும் ஏராளமான வர்த்-தக நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதனால், கோவை சாலை பிரிவு முனியப்பன் கோவில் பகுதியில், போக்குவரத்து சீராக செல்ல பல மாதங்களுக்கு முன், வேகத்தடைகள் அமைக்கப்பட்-டது.


தற்போது, வேகத்தடையையொட்டியுள்ள சாலையில் பள்ளம் ஏற்-பட்டுள்ளது. அதை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்
கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
இதனால், அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறிய அளவிலான விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, முனியப்பன் கோவில் அருகே, வேகத்தடை பகுதியில் உள்ள பள்-ளத்தை, உடனடியாக சரி செய்ய நெடுஞ்சாலை துறை அதிகா-ரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement