16 வயது சிறுவன் கொலை வழக்கு: டில்லியில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது

புதுடில்லி: சிறுவன் கொலை வழக்கில் டில்லியில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே 16 ஆம் தேதி இரவு, 11.30 மணியளவில் பூங்கா பகுதியில் ரோந்து பணியில்,போலீஸ் குழு ஒன்று ஈடுபட்டிருந்தது. அப்போது பூங்காவில் சென்றபோது ஒரு பெஞ்ச்க்கும் பாதைக்கும் இடையே சிறுவனின் உடல் காணப்பட்டது. அந்த உடலை கண்ட போலீஸ் குழு,சீலம்பூர் காவல் நிலையத்தில் உள்ள மற்ற அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.
அடுத்த நாள் இரவு 11.30 மணியளவில் ஒரு போலீஸ் குழுவுடன் சம்பவ இடத்திற்கு வந்து அவரை ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு மருத்துவர்கள் அந்த சிறுவன் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இது குறித்து டில்லி போலீசார் கூறியதாவது:
சிறுவனின் மரணம் குறித்து குற்றவியல் குழு மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தது. அதில் அந்த 16 வயது சிறுவன் தங்களுக்கு போட்டியாக உள்ள குற்றக்குழுவில் சேர்ந்ததை அடுத்து, மற்றொரு குழுவினர் அந்த சிறுவன் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. இதனையடுத்து பூங்கா அருகே இருந்த சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில், குழு பல சோதனைகளை நடத்தி, இரண்டு சிறுவர்கள் உட்பட மேலும் மூன்று பேரைக் கைது செய்தோம்.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட 16 வயது சிறுவனின் அதே குற்றவியல் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தினர். இருப்பினும், பாதிக்கப்பட்டவர் சமீபத்தில் ஒரு போட்டி குழுவுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினார், இது உள் மோதல்களுக்கு வழிவகுத்தது. இப்பிரச்னையை தீர்ப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த சிறுவனை பூங்காவிற்கு அழைத்தனர், அவர் எதிர்த்தபோது, கற்கள், உடைந்த செங்கற்கள் மற்றும் பிளேடைப் பயன்படுத்தி அவரைத் தாக்கினர். அவரைக் கொன்ற பிறகு அவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டு கைதானவர்களான,23 வயதான பைஸ் என்ற அலி, 22 வயதான ரஹில் என்ற சாஹில் மற்றும் 15 முதல் 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மற்ற குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பதை விசாரிக்க மேலும் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு போலீசார் கூறினர்.
மேலும்
-
லாட்ஜில் புகுந்து மாமூல் கேட்டு நகராட்சி தி.மு.க., கவுன்சிலரை கத்தியால் வெட்டிய கும்பல்
-
வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
-
நீர்த்தேக்க தொட்டி பணிகள் மந்தம் காலி குடத்துடன் பெண்கள் போராட்டம்
-
காரில் 220 கிலோ குட்கா பறிமுதல்
-
மாமனாரை வெட்டிய மருமகனுக்கு 'காப்பு'
-
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் 'குட்கா' பறிமுதல்; 2 பேர் கைது