லாட்ஜில் புகுந்து மாமூல் கேட்டு நகராட்சி தி.மு.க., கவுன்சிலரை கத்தியால் வெட்டிய கும்பல்

அரக்கோணம்: அரக்கோணத்தில் மாமூல் கேட்டு, லாட்ஜிற்குள் புகுந்து தி.மு.க., கவுன்சிலர் உள்ளிட்ட நான்கு பேரை, கத்தியால் வெட்டிய கும்-பலை, போலீசார் தேடி வருகின்றனர்.


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி ஆறாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பாபு, 36; இவரின் தந்தை மணி, 60; இவர்களுக்கு சொந்தமான லாட்ஜ், அரக்கோணம் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ளது. பைனான்ஸ் தொழிலும் செய்கின்-றனர். லாட்ஜில் நேற்று முன்தினம் இரவு, பாபு, லாட்ஜ் மேனேஜர் சுரேஷ், 37, மற்றும் ஜெகன், 33, ஆகியோருடன், கணக்கு வழக்குகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது வந்த நான்கு பேர், பாபுவிடம் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்-டனர். தர மறுத்ததால் அவரை கத்தியால் வெட்டினர். கும்பலை தடுத்த பாபுவின் தந்தை மணி, மேனேஜர் சுரேஷ், ஜெகனும் கத்-தியால் வெட்டப்பட்டனர். நான்கு பேரும் அரக்கோணம் அரசு மருத்து-வமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின்படி அரக்கோணம் டவுன் போலீசார், கத்தியால் வெட்டிய ஆசாமிகளை தேடி வருகின்-றனர்.

Advertisement