முதியவர் சாவு போலீஸ் விசாரணை

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஈருடையாம்பட்டைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர், 60; இவர் நேற்று முன்தினம் இரவு அரும்புராம்பட்டுக்கு விசேஷத்திற்கு செல்வதாக கூறிச் சென்றவர், வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் அரும்புராம்பட்டு பகுதி, சாலையோரம் நேற்று முன்தினம் இறந்து கிடந்தது தெரியவந்தது.

மூங்கில்துறைப்பட்டு போலீசார், அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement